2014-11-27 15:53:45

மரண தண்டனைக்கு எதிராக, "வாழ்வை ஆதரிக்கும் நகரங்கள்"


நவ.27,2014. நவம்பர் 30, இஞ்ஞாயிறன்று, மரண தண்டனைக்கு எதிராக, "வாழ்வை ஆதரிக்கும் நகரங்கள்" என்று மேற்கொள்ளப்படும் உலகளாவிய முயற்சியின் ஓர் அங்கமாக, Sant'Egidio அமைப்பைச் சேர்ந்தவர்கள், உரோம் நகரில் அமைந்துள்ள Colosseum திடலில் சிறப்பு விளக்குகளை ஒளியேற்றுகின்றனர்.
1786ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி, Tuscany என்ற நகரில் முதன்முறையாக மரண தண்டனையை சட்டப்பூர்வமாக நீக்கிய நிகழ்வைக் கொண்டாடுவதற்கு, இன்று உலகின் 1900 நகரங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
உரோம் நகரில், நவம்பர் 27, இவ்வியாழன், வத்திக்கானின் பழமைவாய்ந்த சிறையான Regina Coeli என்ற நினைவிடத்தில், குற்றம் ஏதுமின்றி, மரண தண்டனை பெற்று, 20 ஆண்டுகள் சிறையில் இருந்து 2007ம் ஆண்டு விடுதலையான, அமெரிக்க நாட்டவரான Curtis McCarty என்பவர் உரையாற்றுகிறார்.
உரோமையர்கள் கிறிஸ்தவர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்திய Colosseum என்ற திறந்த வெளியரங்கில், நவம்பர் 30, ஞாயிறன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஒரு கூட்டத்தில், மரண தண்டனைக்கு எதிரான சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று Sant'Egidio அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.