மனித மதிப்பீடுகளை அழிவிலிருந்து காப்பாற்ற நற்செய்தி அறிவித்தல் தேவை
நவ.22,2014. ஆசியாவில் கம்யூனிசத்தால் மனித மதிப்பீடுகள் அழிவுக்குள்ளாகியிருப்பதாகவும்,
அவற்றைச் சீரமைக்க தீவிர நற்செய்தி அறிவிப்புத் தேவைப்படுகின்றது எனவும் உரைத்தார் ஹாங்காங்
கர்தினால் ஜோசப் சென். கடவுளால் மட்டுமே மனிதனைக் காப்பாற்ற முடியும் என்பதால், கடவுளைக்
குறித்து நாம் அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது என்ற ஹாங்காங்கின் முன்னாள் பேராயர் கர்தினால்
சென் அவர்கள், நற்செய்தி அறிவிப்பின்வழி மனித மதிப்பீடுகளையும், உரிமைகளையும் நாம் வலியுறுத்திக்
கூறவேண்டியிருக்கிறது என்றார். சீன அரசின் மதக்கொள்கைகளில் எவ்வித மாற்றத்தையும் தான்
எதிர்பார்க்கவில்லை எனவும் உரைத்த கர்தினால் சென் அவர்கள், சமூகங்களில் பேச்சுவார்த்தைகளை
தொடர்ந்து ஊக்குவித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சிகள் நல்ல பலனைத்
தரும் என தான் உறுதியாக நம்புவதாகவும் கூறினார்.