2014-11-22 16:20:13

கர்தினால் Fiorenzo Angelini அவர்களின் மறைவு குறித்து திருத்தந்தையின் அனுதாபங்கள்


நவ.22,2014. நலப்பணியாளர்கள் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் முன்னாள் தலைவர், கர்தினால் Fiorenzo Angelini அவர்களின் மறைவு குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Autism என்ற மாற்றுத்திறன் கொண்டோரைக் குறித்து, திருப்பீடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற நலப்பணியாளர்களை, இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளைப் பாதித்து, அதன்வழி பெற்றோரை கவலைக்குள்ளாக்கும் இந்த குறைபாட்டைக் குணப்படுத்தவும், இந்தக் குறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கவும், திருப்பீட நலப்பணியாளர்கள் எடுத்துவரும் முயற்சிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.
இந்த நலப்பணியாளர் மேய்ப்புப்பணி திருப்பீட அவையை உருவாக்கிய கர்தினால் Angelini அவர்களின் மறைவு குறித்து, ஆழ்ந்த வருத்தத்தையும் வெளியிட்டார் திருத்தந்தை.
1916ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், முதல் தேதி உரோம் நகரில் பிறந்த கர்தினால் Fiorenzo Angelini அவர்கள், இத்தாலிய மருத்துவர் கழகத்தை உருவாக்கியவர்.
நலப்பணியாளர்கள் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் முதல் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Fiorenzo Angelini அவர்கள், இச்சனிக்கிழமை காலை, தன் 98வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.