அமெரிக்க அரசுத் தலைவர் Barack Obama அவர்கள் அறிவித்துள்ள பொது மன்னிப்பு முடிவுக்கு
தலத்திருஅவை பாராட்டு
நவ.22,2014. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் அனுமதியின்றி குடியேறியுள்ள
40 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள அரசுத் தலைவர் Barack
Obama அவர்களின் செயலை, அந்நாட்டுத் தலத்திருஅவை பாராட்டியுள்ளது. ஏறத்தாழ 50 இலட்சம்
மக்கள் பயனடைய வழிவகுக்கும் இத்திட்டத்தை வரவேற்கும் அதேவேளை, இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்
தீர்வு காண வேண்டியதும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார், குடியேற்றதாரர்களுக்கு உதவிவரும்
அமெரிக்க கத்தோலிக்க சட்ட அமைப்பின் அதிகாரி, Michelle Sardone. நியாயமான காரணங்களுடன்,
அதேவேளை, அனுமதியின்றி அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் குடிபுகுந்துள்ள இன்னும் பலரும்
இந்த பொது மன்னிப்பின் கீழ் இணைக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும், Sardone அவர்கள்
முன்வைத்துள்ளார். நாட்டின் நலனையும், குடியேற்றதாரர் நலனையும் மனதிற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள
பொது மன்னிப்பு என்ற இம்முடிவை வரவேற்பதாக அமெரிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.