நவ.20,2014. மலைமாதா திருத்தலம், பாளையங்கோட்டை மறைமாவட்டம் சேந்தமரம் பங்கைச் சேர்ந்த
திருமலாபுரம் என்ற கிராமத்தில் உள்ளது. வெறும் பாறையைக் கொண்ட ஒரு மலை உச்சியில் உள்ள
இவ்வாலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து சேந்தமரம்
பங்குத்தந்தையாகப் பணியாற்றும் அ.பணி அந்தோணி யாகப்பன் அவர்கள் இம்மலைமாதா திருத்தலம்
பற்றிப் பகிர்ந்து கொள்கிறார். இவ்வாலயம் 2013ம் ஆண்டில் நூற்றாண்டு கண்டுள்ளது.