திருத்தந்தையின் பாராட்டு - Zambia நாடு, மறை போதகர்களாலும், தேவ அழைத்தல்களாலும் நிறைவாக
ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது
நவ.17,2014. Zambia நாடு, கத்தோலிக்க மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளோடு மட்டுமல்ல, பொது
நிலையினரான மறை போதகர்களாலும், தேவ அழைத்தல்களாலும் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது
என்று பாராட்டுக்களை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
இடம்பெறும் Ad Limina சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்துள்ள Zambia நாட்டு ஆயர்களை, இத்திங்கள்
காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Zambiaவில் குடும்பங்கள்
அனுபவித்துவரும் இக்கட்டானச் சூழல் குறித்து கவலை வெளியிட்டார். உறுதியான கிறிஸ்தவக்
குடும்பங்கள் உருவாக்கப்பட ஊக்கமளித்தல், இன்றைய உலகில் குறிக்கோளற்று வாழும் இளையோருக்கு
வழிகாட்டி நடத்திச் செல்லுதல், ஏழைகளுக்கு உதவுதல், AIDS நோயுற்றோருக்குப் பணியாற்றுதல்
போன்றவற்றில் தலத்திருஅவை முழு ஈடுபாட்டுடன் செயலாற்ற, ஆயர்களிடம் அழைப்பு விடுத்தார்,
திருத்தந்தை பிரான்சிஸ். கலாச்சாரங்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும்,
Zambia நாட்டு ஆயர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.