2014-11-15 16:10:07

திருமணத்தின் முக்கியத்துவம் குறித்த பல்சமயக் கருத்தரங்கு


நவ.15,2014. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் உறவு குறித்த ஆழமான சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் நவம்பர் 17, வருகிற திங்களன்று பல்சமயக் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது வத்திக்கான்.
குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் முடிந்துள்ள இவ்வேளையில், 'Humanum' என்ற தலைப்பில், 17,18,19 தேதிகளில் மூன்று நாள் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
14 மதங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளவிருக்கும் இக்கருத்தரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட நாற்பது பேர் உரையாற்றுவார்கள்.
ஒரு நலமான சமுதாயத்திலும், சமயத்திலும், மனிதரின் உடல், உள்ளக் கூறுகளிலும் திருமணம் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி இக்கருத்தரங்கில் அலசப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.