நவ.07,2014. இத்தாலிய துறவு சபைகளின் தலைவர்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட ஏறக்குறைய
நூறு பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
உடன்பிறந்தோர் உணர்வுடன் வாழும் வாழ்வு பற்றிப் பேசினார். உலகில், குறிப்பாக இன்றைய
உலகில் உடன்பிறந்தோர் நிலையின் உண்மையான பொருளுக்குச் சாட்சியாக விளங்குவதற்கு, உடன்பிறந்தோர்
உணர்வுடன் வாழும் வாழ்வு இன்றியமையாத கூறு என்று கூறினார் திருத்தந்தை. எனினும், உடன்பிறந்தோர்
நிலை, கடவுளின் தந்தைமை மற்றும் திருஅவையின் தாய்மைக்கு முன்னடையாளமாக உள்ளது என்றும்,
இந்த உறவில் நாம் ஒவ்வொரு நாளும் வளர, திருநற்கருணை ஆராதனை, திருப்பலி, செபமாலை, செபம்,
திருப்பலி ஆகியவை உதவியாக உள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை. இத்தாலிய துறவு சபைகளின்
தலைவர்களின் 54வது தேசிய மாநாடு, தீவொளியில் இத்திங்கள் முதல் இவ்வெள்ளி முடிய நடைபெற்றது.