2014-11-04 15:09:45

காசாப் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு மலாலா நன்கொடை


நவ.04,2014. 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்துகொண்டுள்ள 17 வயது பாகிஸ்தானியச் சிறுமி மலாலா யூசாப்சாய் அவர்கள், பாலஸ்தீனாவின் காசாப் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்குத் தனது ஒரு விருது நிதியான ஐம்பதாயிரம் டாலரை வழங்கியுள்ளார்.
பாலஸ்தீனப் புலம்பெயர்ந்தோருக்கு உதவிவரும் UNRWA நிறுவனம், காசாப் பகுதியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கென, தனக்குக் கிடைத்த உலகச் சிறார் விருதின் ஐம்பதாயிரம் டாலரை மலாலா வழங்கியுள்ளார் என்று AP செய்தி நிறுவனம் கூறியது.
கல்வியின்றி அமைதி ஒருபோதும் இடம்பெறாது என்றும், பாலஸ்தீனச் சிறார் தரமான கல்விபெறத் தகுதியுடையவர்கள் என்றும் மலாலா கூறியதாக UNRWA நிறுவனம் தெரிவித்தது. இவ்விருதை ஸ்டாக்ஹோமில் பெற்றுள்ளார் மலாலா.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே நடந்த 50 நாள் சண்டையில் காசாவில் ஐ.நா. நடத்தும் பல பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன மற்றும் சேதமாக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : AP







All the contents on this site are copyrighted ©.