2014-10-28 15:18:47

கொலையுண்டவரின் குடும்பம் தனக்கு வழங்கிய மன்னிப்பு புதுவாழ்வை அளித்துள்ளது


அக்.28,2014. இந்தியாவில் 1995ம் ஆண்டில் அருள்சகோதரி ராணி மேரியைக் கொலை செய்த சமந்தர் சிங் மீது அச்சகோதரியின் குடும்பத்தினர் காட்டிய கருணை அவருக்குப் புதிய வாழ்வை அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருள்சகோதரி ராணி மேரியின் சகோதரி செல்மி அவர்கள் 2002ம் ஆண்டில் சிறையில் சென்று சமந்தர் சிங்கைச் சந்தித்து, அவரைத் தனது குடும்பத்தினர் மன்னித்துவிட்டதாகத் தெரிவித்தபோது அவருக்கு மறுவாழ்வு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒரு கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் சமந்தர் சிங்.
சகோதர சகோதரிகளுக்கு இடையே நிலவும் அன்பையும் கடமையையும் கொண்டாடும் ராகிப் பண்டிகை நாளன்று சிறையில் தன்னைச் சந்தித்து, தனது கரத்தில் ராகி கயிற்றையும் அச்சகோதரி கட்டினார் என்று கூறியுள்ளார் சமந்தர் சிங்.
உதய்நகருக்கு அருகில் காட்டுப் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்து பயணிகளின் முன்பாக, அருள்சகோதரி ராணி மேரியை 54 தடவைகள் கத்தியால் குத்திக் கொலை செய்தார் சமந்தர் சிங்.
அருள்சகோதரி ராணி மேரியை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகள் திருஅவையில் இடம்பெற்று வருகின்றன.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.