2014-10-27 16:02:52

இந்தோனேசியத் திருஅவையின் முயற்சியில் பல்சமயக் கருத்தரங்கு


அக்.27,10,2014. இந்தோனேசியாவின் முன்டிலான் நகரில் அந்நாட்டு ஆறு மதங்களின் பிரதிநிதிகள் பங்குபெற்ற மூன்று நாள் கூட்டம், கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் இடம்பெற்றது.
செமராங்க் உயர்மறைமாவட்டத்தின் மதங்களிடையே உறவுகளை வளர்க்கும் பணிக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கரருத்தரங்கில் இஸ்லாமியர், கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், புத்த மதத்தினர், இந்துக்கள் மற்றும் கன்ஃபூசியன் மதத்தினர் என 812 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து வாழ்வதை வளர்க்கும் நோக்கில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், கலாச்சார, கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மறைந்த கர்தினால் ஜஸ்டினுஸ் தர்மொஜுவோனோ பிறந்ததன் 100ம் ஆண்டைக் கொண்டாடிவரும் இவ்வேளையில், அவர் வாழ்வைச் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்றும் இக்கருத்தரங்கில் திரையிடப்பட்டது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.