2014-10-25 15:50:48

Autism நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு


அக்.25,2014. Autism என்ற நரம்பு தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்பவர்களுக்கென வருகிற நவம்பர் 20 முதல் 22 வரை, திருப்பீட நலவாழ்வுப் பணியாளர் அவை அனைத்துலக கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.
இக்கருத்தரங்கில் இந்நோய் குறித்த முக்கிய வல்லுனர்கள் ஐந்து கண்டங்களிலிருந்து கலந்துகொள்வார்கள்.
Autism நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எவ்வாறு உதவுவது என்பது இந்த மூன்று நாள் கருத்தரங்கில் ஆராயப்படும் என, திருப்பீட நலவாழ்வு அவை அறிவித்துள்ளது.
Autism நோய் என்பது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்று கூறப்படுகின்றது. ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாயத்தில் அவரின் செயல்பாடுகள், அவர் ஆர்வம் கொள்ளும் துறைகள், அவரின் நடத்தைப்பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி குறையை இந்நோய் குறிக்கும்.
பொதுவாக, குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குமுன் இக்குறைபாடு ஏற்படும் எனவும் சொல்லப்படுகின்றது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.