2014-10-23 16:20:31

பிலிப்பின்ஸ் சிறைக் கைதிகள் திருத்தந்தையைக் காண விண்ணப்பம்


அக்.23,2014. வரும் ஆண்டு சனவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் வேளையில், தங்களைச் சந்திக்க அவர் வரவேண்டும் என்ற விண்ணப்பத்தை, அந்நாட்டின் சிறைக் கைதிகள் விடுத்துள்ளனர்.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகே Mutinlupa என்ற இடத்தில் அமைந்துள்ள சிறையில் 20,000த்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
இக்கைதிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் காண விழையும் விண்ணப்பத்தை, பிலிப்பின்ஸ் திருப்பீடத் தூதர் பேராயர், Giuseppe Pinto அவர்கள் வழியாக அனுப்பியுள்ளனர் என்று Zenit செய்திக்குறிப்பு கூறுகின்றது.
இறைவனின் குழைந்தைகள் அனைவரையும் தன் சொல்லாலும், செயலாலும் தூண்டிவரும் திருத்தந்தை அவர்கள், தங்களைக் காண்பதற்கு ஒரு சில நிமிடங்கள் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையை, சிறைக் கைதிகளின் விண்ணப்பம் வெளிப்படுத்துகிறது.
சிறைக் கைதிகள் உட்பட சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டுள்ள மக்கள் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனிப்பட்ட அக்கறை கொண்டவர் என்பதும், Isernia என்ற இடத்தில் உள்ள சிறைக் கைதிகளை இவ்வாண்டு ஜூலை மாதம் அவர் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.