அக்.23,2014. அமெரிக்காவின் Pittsburgh பகுதியில் வாழ்ந்து வரும் Sahil Doshi என்ற 14
வயது நிறைந்த இந்திய இளைஞருக்கு அமெரிக்காவின் இளம் அறிவியலாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்
வடிவமைத்துள்ள PolluCell என்ற கருவி, காற்றிலுள்ள கார்பன்டை ஆக்சைடை மின் சக்தியாக மாற்றும்
திறன் கொண்டது. இதனால், நம் சுற்றுச் சூழலில் ஆபத்தான அளவு பெருகிவரும் கார்பன்டை ஆக்சைடை
குறைப்பதுடன், நமக்குத் தேவையான மின்சக்தியையும் உருவாக்க முடியும் என்பதை Sahil Doshi
தன் கண்டுபிடிப்பால் உலகறியச் செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவின் 3M Innovation
Centre என்ற அமைப்பு, இவருக்கு அமெரிக்காவின் Discovery Education 3M இளம் விஞ்ஞானி விருதையும்,
25 ஆயிரம் அமெரிக்க டாலரையும் வழங்கியுள்ளது. இந்த விருதுக்கான இறுதிச்சுற்றில் மொத்தம்
9 பேர் போட்டியிட்ட நிலையில், Sahil Doshiக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மேலும்
காற்று தூய்மைக்கேட்டை தடுப்பதற்காக ஜன்னலில் பொருத்தப்படும் சிறப்பு கருவியை கண்டுபிடித்த
ஜெயக்குமார் என்பவர், இப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.