2014-10-18 15:34:07

நைஜீரீயாவில் Boko Haram இஸ்லாமிய அமைப்பு பள்ளிச் சிறுமிகளை விடுவிக்க ஒப்புதல்


அக்.18,2014. நைஜீரீயாவின் Boko Haram இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டுள்ளவேளை, இந்தப் போர் நிறுத்தம் நிலைத்து இருக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் அந்நாட்டுக் கர்தினால் John Onaiyekan.
இவ்வொப்பந்தம் குறித்து வத்திக்கான் வானொலியில் கருத்து தெரிவித்த, நைஜீரீயக் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவரான கர்தினால் Onaiyekan அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக நைஜீரீயா அனுபவித்துவரும் அறிவற்ற செயல்கள் உண்மையிலேயே முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
வன்முறையையும் பதட்டநிலைகளையும் எவருமே விரும்பவில்லை என்பதை இப்போர் நிறுத்த ஒப்பந்தம் Boko Haram அமைப்புக்கு உணர்த்த வேண்டுமென்றும் அபுஜா பேராயரான கர்தினால் Onaiyekan அவர்கள் கூறினார்.
Boko Haram இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு நைஜீரீய இராணுவத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டுள்ளதோடு, ஆறு மாதங்களுக்கு முன்னர் கடத்திய 200 பள்ளிச் சிறுமிகளை விடுவிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நைஜீரீய பாதுகாப்புத்துறையின் Alex Badeh, இவ்வெள்ளி பிற்பகலில் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.