திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கருணையை மையப்படுத்தி வெளியிட்டுள்ள Twitterசெய்தி
அக்.16,2014. “கிறிஸ்தவர் இயல்பிலேயே கருணையுள்ளவர்; இதுவே நற்செய்தியின் உயிர்த்துடிப்பு”
என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Twitter செய்தியாக இவ்வியாழனன்று
வெளியிட்டார். இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், இலத்தீன், அரேபியம் உட்பட 9 மொழிகளில்
திருத்தந்தை வெளியிட்டுவரும் Twitter செய்திகளை, 45,9,000த்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து
வாசித்து வருகின்றனர். கருணையை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பலமுறை
Twitter செய்திகளை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.