2014-10-16 15:58:43

காணாமற்போனவர்கள் குறித்து இலங்கை அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் - செஞ்சிலுவை சங்கம்


அக்.16,2014. இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமற்போனவர்கள் குறித்து, இலங்கை அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று பன்னாட்டுச் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் செஞ்சிலுவை சங்கம் செயலாற்றத் துவங்கியதன் 25ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிவரும் வரும் இவ்வேளையில், இவ்வமைப்பினர் இலங்கை அரசுக்கு இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர் என்று ஆசியச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போதும், 2009ம் ஆண்டு போர் முடிவுற்றதையடுத்தும் செஞ்சிலுவை சங்கத்தினர், இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் மத்தியில் பல பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரின்போது காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்குத் தேவையானப் பொருளுதவிகளையும், மனநலம் தொடர்பான உதவிகளையும் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆற்றிவருவதாக ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.