அக்.14,2014. “ஆண்டவரே, துன்புறும் எல்லாருக்கும், குறிப்பாக, நோயாளிகள், ஏழைகள், வேலையில்லாதோர்
ஆகியோருக்கு ஆறுதலளியும்” என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதி
அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஆறு மாமன்றத் தந்தையர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். பொதுவாக, மாமன்ற இறுதி அறிக்கையை, அம்மாமன்றத்தின் பொதுத் தொடர்பாளர்
தயாரிப்பார். ஆனால், இந்த மாமன்றத்தின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஒரு குழுவை உருவாக்கியுள்ளார்
திருத்தந்தை. திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, வாஷிங்டன்
பேராயர் கர்தினால் Donald Wuerl, அர்ஜென்டீனா பேராயர் Victor Manuel Fernández, மெக்சிகோ
பேராயர் Carlos Aguiar Retes, தென் கொரிய ஆயர் Peter Kang U-il, இயேசு சபை தலைவர் Adolfo
Nicolás ஆகியோரை இக்குழுவுக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை.