இறம்பைக்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தேர் தீயிட்டுச் சேதம்
அக்.13,2014. இலங்கையின் வவுனியா மாவட்டத்திலுள்ள இறம்பைக்குளம் புனித அந்தோணியார் ஆலயத்தேர்
தீயிட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது குறித்து தலத்திருஅவைத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். ஆலயத்தின்
பின்புறம் பாதுகாப்பான முறையில் கட்டிடமொன்றினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேர், ஞாயிறு
அதிகாலை தீயிட்டுக் கொளுத்தப்பட்டதைக் கண்ட மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம்
குறித்து தன் கண்டனத்தை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மக்களுக்கிடையே
பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்செயல் குறித்தும்,
ஆலயங்கள்மீதும், மசூதிகள்மீதும் இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் சட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.