2014-10-10 16:12:21

பாப்புவா நியு கினி ஆயர்: நற்செய்தி அறிவிப்பின் முதல் தளம் குடும்பம்


அக்.10,2014. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இவ்வெள்ளிக்கிழமை பொது அமர்வில் காலை 9 மணிக்கு ஆரம்ப செபம் செய்து மாமன்றத் தந்தையருடன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட பாப்புவா நியு கினியின் Wabag ஆயர் Arnold Orowae அவர்கள், நற்செய்தி அறிவிப்பின் முதல் தளம் குடும்பம் என்று கூறினார்.
பலர் கிறிஸ்துவை அறிவதற்கும், அவரின் திருஅவையின் உறுப்பினர்களாக இருப்பதைக் கற்றுக்கொள்வதற்கும் குடும்பம் ஒரு தளமாக உள்ளது எனவும், குடும்பங்களில் பெற்றோர் இறைவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை மிகக் கவனமுடன் செய்கின்றனர் எனவும் ஆயர் Orowae கூறினார்
தங்கள் குழந்தைகளைப் பேணி, அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வழிநடத்தி பாதுகாத்து வளர்க்கவும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் அவ்வாறே செய்யவுமான தங்கள் கடமையைப் பெற்றோர் குடும்பத்தில் உணருகின்றனர் என்றும் ஆயர் Orowae கூறினார்.
கத்தோலிக்கப் பொதுநிலையினர் என்ற முறையில் குடும்பம் வழியாகவும், குடும்பத்திற்குள்ளும் நற்செய்தி அறிவிப்பதற்கான தங்கள் கடமையைத் தெளிவாகப் புரிந்து அதை அவர்கள் செய்கின்றனர் என்றும் பாப்புவா நியு கினி ஆயர் Orowae கூறினார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.