அக்.09,2014. பிலிப்பீன்சின் வட Cotabato பகுதியின் கிறிஸ்தவ சபை ஆலயம் ஒன்று குண்டு
வீசி தாக்கப்பட்டுள்ளதில் இருவர் இறந்துள்ளனர், மூவர் காயமடைந்துள்ளனர். பிலிப்பீன்சின்
தென் தீவான மிண்டனாவோவிலுள்ள வட Cotabatoவின் Pikit நகரிலுள்ள பிரிந்த கிறிஸ்தவ சபையினரின்
கோவிலில் மாலை செபவழிபாடு நடந்துகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்களில் வந்த இருவர் கைக்குண்டு
ஒன்றை ஆலய வாசல் நோக்கி வீசிவிட்டுச் சென்றதில் இருவர் இறந்துள்ளனர், மூவர் காயமடைந்துள்ளனர். மிண்டனாவோ
பகுதியில் அமைதியை உருவாக்க பல்வேறு சேவைகளை ஆற்றிவரும் அப்பகுதி மக்களுள் ஏறத்தாழ 40
பேர் இக்கோவிலில் செபவழிபாட்டில் கலந்துகொண்டிருந்தபோது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.