2014-10-06 16:43:50

Lesothoவில் தேர்தல் விரைவில் இடம்பெற உள்ளது குறித்து கிறிஸ்தவ சபைகள் மகிழ்ச்சி


அக்.06,2014. Lesotho நாட்டில் தேர்தலை முன்கூட்டியே வைத்துக்கொள்வதற்கு அரசியல் தலைவர்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு பேராயர் Gerard Tlali Lerotholi.
ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அந்நாட்டில் நிலவிவரும் பதட்ட நிலைகள் குறித்து கருத்து வெளியிட்ட பேராயர் Lerotholi, அரசியல் தலைவர்களிடையே உடன்பாடு ஏறபட்டுள்ளது, சனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றார்.
Lesothoவின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடும் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பதட்ட நிலைகளின் காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதித்ததாகவும் கூறினார் பேராயர்.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.