நேர்காணல் – குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம்
அக்.02,2014. அன்பு நேயர்களே, அக்டோபர் 5, வருகிற ஞாயிறன்று வத்திக்கானில் குடும்பம்
குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் தொடங்கவுள்ளது. அக்டோபர் 19 வரை நடக்கவிருக்கும்
இந்த மாமன்றம் பற்றி பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் தொலைபேசி வழியாகக்
கேட்டோம். பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்கள், மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஆறாவது
பேராயராக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னர் திண்டுக்கல் மறைமாவட்ட
ஆயராகப் பணியாற்றி வந்தார்.