சிரிய நாட்டு அகதிகளிடையே கத்தோலிக்க உதவி அமைப்புகள்
அக்.02,2014. கடந்த இரண்டு ஆண்டுகளில் CNEWA என்ற அண்மை கிழக்கு நாடுகளுக்கான கத்தோலிக்க
உதவி அமைப்பு 24 ஆயிரம் குடும்பங்களுக்கு 18 இலட்சம் டாலர்களை வழங்கியுள்ளது. பல்வேறு
மதநம்பிக்கையுடைய 24 ஆயிரத்து 69 சிரியா நாட்டுக் குடும்பங்களுக்கும் 24 ஆயிரத்து 234
குழந்தைகளுக்கும், 17 இலட்சத்து 99 ஆயிரத்து 767 டாலர் மதிப்புடைய உதவிகளை ஆற்றியுள்ளதாகக்
கூறும் இந்த கத்தோலிக்க உதவி அமைப்பு, தலத்திருஅவை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இப்பணியை
ஆற்றிவருவதாகவும் தெரிவிக்கிறது. 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பாலும்,
அடிப்படை நலவாழ்வு வசதிகளும் வழங்கும் இந்த அமைப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும்
வழங்கி வருகிறது. மக்களுக்கு உணவு, போர்வை, சுத்தக் குடிநீர் போன்றவைகளை வழங்குவதிலும்
கவனம் செலுத்திவருகிறது CNEWA கத்தோலிக்க உதவி அமைப்பு.