மத்திய கிழக்குப் பகுதியின் நெருக்கடி குறித்த வத்திக்கான் கூட்டம்
செப்.30,2014. மத்திய கிழக்குப் பகுதியின் நெருக்கடி குறித்த கூட்டம் ஒன்று வருகிற வியாழன்
முதல் சனிக்கிழமை வரை வத்திக்கானில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 2 முதல் 4 வரை நடக்கும்
இக்கூட்டத்தில், திருப்பீடத் தலைமையகத் தலைவர்கள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின்
திருப்பீடத் தூதர்கள் கலந்து கொள்வார்கள். எகிப்து, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டன்,
ஈராக், ஈரான், லெபனன், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதர்கள், நியுயார்க்,
ஜெனீவா ஐ.நா. அலுவலகங்கள், ஐரோப்பிய சமுதாய அவை ஆகியவைகளுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப்
பார்வையாளர்களும் இதில் கலந்து கொள்வார்கள். இக்கூட்டத்தின் கடைசி நாளாகிய சனிக்கிழமை
காலையில் திருத்தந்தை இவர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.