செப்.28,2014. குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்காக திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் இயற்றியுள்ள செபம்......
இயேசு, மரி, வளனாரே, உண்மையான அன்பின் மகிமையை
உங்களில் தியானிக்கிறோம், நம்பிக்கையோடு உங்களிடம் கேட்கிறோம், நாசரேத் திருக்குடும்பமே,
எங்கள் குடும்பங்களும் தொடர்பு மற்றும் செபத்தின் இடங்களாகவும், நற்செய்தியின்
உண்மையான பள்ளிகளாகவும், சிறிய இல்லத் திருஅவைகளாகவும் இருப்பதற்கு வரம் அருளும். நாசரேத்
திருக்குடும்பமே, குடும்பங்கள், வன்முறை, புறக்கணிப்பு மற்றும் பிரிவினையை ஒருபோதும்
மீண்டும் அனுபவிக்காதிருக்கட்டும். புண்படுத்தப்பட்ட அல்லது துர்மாதிரிகையாயிருந்த
எல்லாரும் ஆறுதலையும் குணப்படுத்தலையும் கண்டடைவார்களாக. நாசரேத் திருக்குடும்பமே, குடும்பத்தின்
புனிதத்துவத்தையும், முறிவுபடாத்தன்மையையும் இறைவன் திட்டத்தில் அதன் அழகையும் மீண்டும்
நினைவில் வைப்பதற்கு உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் உதவுவதாக. இந்த எங்களின் வேண்டுதல்களை
இயேசு, மரி, வளனார் வழியாக அர்ப்பணிக்கின்றோம். ஆமென்.