செப்.29,2014. இந்தியாவிலேயே கேரளாவில்தான், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்
இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில குற்றவியல் பதிவேட்டின்படி, இந்த ஆண்டின்
முதல் ஏழு மாதங்களில், கேரளாவில், குழந்தைகளுக்கு எதிராக, 1,336 குற்றங்கள் நடந்துள்ளதாகத்
தெரிய வந்துள்ளது. இதில், 427 பாலியல் வன்செயல்களும் அடங்கும். கடந்த ஆண்டு, குழந்தைகளுக்கு
எதிராக, 1,877 குற்றங்களும், பெண்களுக்கு எதிராக, 8,674 குற்றங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.