2014-09-29 16:02:57

இரஷ்ய ஆக்ரமிப்பால் உக்ரேய்ன் கத்தோலிக்கருக்கு ஆபத்து, திருப்பீடத் தூதர்


செப்.29,2014. உக்ரேய்ன் நாட்டில் இரஷ்யா நிகழ்த்தியுள்ள ஆக்ரமிப்புகளால், அந்நாட்டில் பெரிய அளவிலான நிலையற்றதன்மைகளும், அரசியல் சித்ரவதைகள் மீண்டும் இடம்பெறுவதற்கான அச்சுறுத்தல்களும் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உக்ரேய்னுக்கான திருப்பீடத் தூதர் கவலையை வெளியிட்டார்.
இரஷ்ய அரசின் உறுதிமொழிகள் பல இருக்கின்றபோதிலும், உக்ரேய்னின் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிரான இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் சகிப்பற்றத் தன்மைகளும் பகைமைச் செயல்களும் புதிய நம்பிக்கைகளைத் தரவில்லை என்றார் திருப்பீடத்தூதர் பேராயர் Thomas Gullickson
1946ம் ஆண்டில் உக்ரேய்ன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவை அடக்கி ஒடுக்கப்பட்டதைப்போல் மீண்டும் இடம்பெறும் அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது என மேலும் கூறினார் அவர்.
இரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளில் வாழும் கத்தோலிக்கக் குருக்கள் ஏற்கனவே அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக பேராயர் Gullickson மேலும் கூறினார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.