அனைவரும் ஒன்றிணைந்து துடுப்பு வலித்து திருஅவைப் படகைச் செலுத்தவேண்டும்
செப்.29,2014. இருளின் சக்திகள் நெருங்கிவரும் வேளைகளில் திருஅவையின் அங்கத்தினர்கள்
அனைவரும் ஒன்றிணைந்து துடுப்பு வலித்து படகைச் செலுத்தவேண்டும் என இயேசு சபையினரை நோக்கி
அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இடையில் தடைச்செய்யப்பட்ட இயேசு சபை மீண்டும்
இயங்கத் துவங்கியதன் 200ம் ஆண்டையொட்டி உரோம் நகரின் இயேசு கோவிலில் நன்றித் திருவழிபாட்டில்
கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களைக் காப்பற்றிக்கொள்ள முயலாமல் இறைவிருப்பத்தை
அப்படியே ஏற்றுக்கொண்ட இயேசு சபையினரின் நேர்மறைப் போக்கையும், சபையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான
விருப்பத்தையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். ஒருவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு
தன்னை பாவி என ஏற்றுக்கொள்வதே, சரியானப் பாதையில் நடைபோடுவதற்கும், ஆறுதல் பெறுவதற்குமான
சிறந்த வழி எனவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பிறரன்பு, ஒன்றிப்பு, பணிவு,
பொறுமை, நற்செய்தி காட்டும் எளிமை, இறைவனுடன் உண்மை நட்புறவு ஆகிய உணர்வுகளுடன் செயல்படுவதைத்
தவிர மற்ற அனைத்தும் உலகு சார்ந்தவையே எனவும் இயேசுசபை அங்கத்தினர்களிடம் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.