செப்.29,2014. 'குடும்பத்திற்கு உணர்த்துதல் : அன்பின் கொடையை எதிர்கொளவதற்கான சிறப்புரிமையின்
இடம் அது' என்பதை அடுத்த ஆண்டின் சமூகத்தொடர்பு நாளுக்கானத் தலைப்பாக அறிவித்துள்ளது
திருப்பீடம். இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட சமூகத்தொடர்பு நாள் தலைப்பின் தொடர்ச்சியாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இத்தலைப்பு, குடும்பங்கள் குறித்து வரவிருக்கும் இரு உலக ஆயர்கள்
மாமன்றங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. பெந்தக்கோஸ்து திருவிழாவிற்கு முந்தைய ஞாயிறன்று
திருஅவையில் சிறப்பிக்கப்படும் சமூகத்தொடர்பு நாள், வரும் ஆண்டு, அதாவது 2015ம் ஆண்டில்
மே 17ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது. பாரம்பரியமாக, இந்நாளுக்கான சிறப்புச் செய்தி
திருத்தந்தையால் ஜனவரி 24ம் தேதி, அதாவது, எழுத்தாளர்களின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ்
டி சேல்ஸ் விழாவன்று வெளியிடப்படும்.