வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
செப்.27,2014. பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் கேட்டு விண்ணப்பிப்போரின்
எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான நிறுவனம் (UNHCR) தெரிவித்துள்ளது. இந்த
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இவ்வெண்ணிக்கை மூன்று இலட்சத்து முப்பதாயிரமாக அதிகரித்துள்ளதாக
ஐ.நா. கூறியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2014ம் ஆண்டில் புகலிடம்
கேட்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு சிரியாவிலும் இராக்கிலும்
தொடரும் மோதல்களே முக்கிய காரணம் எனவும் UNHCR கூறுகின்றது. ஜெர்மனியிலும் அமெரிக்க
ஐக்கிய நாட்டிலுமே மக்கள் அதிகமாகப் புகலிடம் கேட்பதாகச் சொல்லப்படுகின்றது.