2014-09-27 15:58:48

உலக சுற்றுலா தினம்(செப்.27), ஐ.நா.செய்தி


செப்.27,2014. சுற்றுலாக்களால் கிடைக்கும் நன்மைகளால், சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படும் நாடுகளும் பயனடையும் வகையில் உறுதியான கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கு, உலக சமுதாயம் தன்னை அர்ப்பணிக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
செப்டம்பர் 27, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சுற்றுலா தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், சுற்றுலாக்களால் கிடைக்கும் நன்மைகளைக் குறைக்க முயற்சிப்பது, 2015ம் ஆண்டுக்குப் பின்னர் வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்குப் பாதிப்பாக அமையும் என எச்சரித்துள்ளார்.
மக்கள் பல திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு சுற்றுலாக்கள் உதவுகின்றன, வேளாண்மை, கட்டுமானம், நுண்கலைகள் போன்ற துறைகளில் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களையும், வியாபாரங்களையும் சுற்றுலாக்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன என்றும் ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.
வறுமையைப் போக்கி, பாலின வேறுபாடின்றி அனைவரும் முன்னேற வாய்ப்பளித்து சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கு உதவுவது, உலக மக்கள் மத்தியில் நல்லதொரு மாற்றம் ஏற்படுவதற்கு முக்கியமானதாகும் எனவும் அச்செய்தி கூறுகிறது.
உள்நாட்டு உற்பத்தியில் 11 விழுக்காட்டுக்கு, சுற்றுலாக்கள் காரணமாக உள்ளன.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.