செப்.26,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபரில் நிகழ்த்தவுள்ள திருவழிபாடுகளை
வெளியிட்டுள்ளது திருத்தந்தையின் திருவழிபாட்டு அலுவலகம். அக்.4, சனிக்கிழமை மாலை
6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு
மாமன்றத்திற்காக வழிபாடு, அக்.5, ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு
பசிலிக்கா பேராலயத்தில் குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற ஆரம்பத் திருப்பலி, அக்.12,
ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இரு கானடா நாட்டு
அருளாளருக்குப் புனிதர் பட்டத் திருப்பலி, அக்.19, ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான்
தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் குடும்பம் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்ற நிறைவுத்
திருப்பலி, இறையடியார் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்படல், அக்.20
திங்கள் அப்போஸ்தலிக்க மாளிகையில் கன்சிஸ்டரி அறையில் சிலருக்குப் புனிதர் பட்டம் குறித்த
கூட்டம் ஆகியவை திருத்தந்தையின் அக்டோபர் திருவழிபாட்டு நிகழ்வுகள் என அறிவித்துள்ளது
திருவழிபாட்டு அலுவலகம்.