திருத்தந்தை : நம் பலவீனங்களையும், பாவங்களையும் புரிந்துகொள்பவர் இயேசு
செப்.25,2014. 'நம் பலவீனங்களையும், பாவங்களையும் புரிந்துகொள்ளும் இயேசு, நாம் நம்மை
மன்னிக்க அனுமதிக்கும்போது, நம்மை மன்னித்து ஏற்கிறார்' என தன் டுவிட்டர் பக்கத்தில்
இவ்வியாழனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இவ்வியாழன்று திருப்பீடத்திற்கான
பானமாவின் புதிய தூதுவர் Miroslava Rosas Vargasடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றார்
திருத்தந்தை பிரான்சிஸ். இதேநாள் காலையில் திருப்பீடத்தில் இத்தாலியின் மிலான் பேராயர்
கர்தினால் Angelo Scola, தென்கொரிய கர்தினால் Andrew Yeom Soo-jung, பெல்ஜியம், பெலோருஷ்யா,
கொலம்பியா ஆகிய நாடுகளுக்கான திருப்பீடத் தூதர்களையும் சந்தித்தபின், அர்ஜென்டீனா நாட்டின்
பிரபல எழுத்தாளர் Marcos Aguinis அவர்களையும் தனியாகச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.