2014-09-22 16:34:50

இறைவனையன்றி வேறுபக்கம் நாம் ஆறுதல் தேடினால் அது நமக்குப் பெருந்துயரமே, திருத்தந்தை


செப்.22,2014. மறைசாட்சிகளால் இன்று நாம் தொடப்பட்டுள்ளோம். உங்கள் மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்துள்ளது எனக்குத் தெரியாமல் இருந்தது. இத்திருப்பயணத்துக்காகத் தயாரித்தபோது நான் வாசித்து வியப்படைந்தேன். இந்நாளில் விமான நிலையத்திலிருந்து வரும்வழியில் நெடுஞ்சாலையில் மறைசாட்சிகளின் படங்களைப் பார்த்தேன். இருவரின் சாட்சிய அனுபவங்கள் பற்றிக் கேட்டோம். இது மறைசாட்சிகளின் நாடு. நமக்கு ஆறுதலளிக்கும், ஒவ்வோர் ஆறுதலுக்கும் ஊற்றான இறைவனே, கருணையுள்ள இறைவனே, இவ்வளவு சித்ரவதைகளுக்கு மத்தியிலும் அவர்கள் வாழ்ந்தற்குக் காரணம். இறைவனையன்றி வேறுபக்கம் நாம் ஆறுதல் தேடினால் அது நமக்குப் பெருந்துயரமே. நம் ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறிடத்தில் ஆறுதல் தேடும் அருள்பணியாளர்கள், துறவிகள், நவதுறவியர், குருத்துவ மாணவர்கள் ஆகிய எல்லாருக்கும் அது பெருந்துயரத்தைக் கொண்டுவரும். இப்படி நீங்கள் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கமாட்டீர்கள்.
இவ்வாறு அருள்பணியாளர்கள், துறவிகள், நவதுறவியர் மற்றும் குருத்துவ மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.