மத்தியக்கிழக்கு நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கு ஜோர்டன் மன்னர் ஆதரவு
செப்.18,2014. மத்தியக்கிழக்குப் பகுதியில் ISIL தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகிவரும் வேளையில், கிறிஸ்தவர்களின் முழுபாதுகாப்புக்கு உறுதிவழங்குவதாக அறிவித்துள்ளார்
ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா. மன்னர் அப்துல்லாவின் இந்த அறிவிப்பு குறித்து
தன் மகிழ்ச்சியை வெளியிட்ட யெருசலேமின் இலத்தீன் ரீதி பிதாப்பிதா Fouad Twal, ஜோர்டான்
நாடு எப்போதும் எல்லோருக்கும் தஞ்சம் வழங்கும் ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது என்றார். அரபு
கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும், மத்தியக்கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களின்
இருப்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதி வழங்கியுள்ளார் மன்னர் இரண்டாம் அப்துல்லா.