2014-09-16 16:28:35

இலங்கையில் குணப்படுத்தும் வழிபாட்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு


செப்.16,2014. கொழும்பு உயர்மறைமாவட்டத்தில் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தலைமையில் நடந்த குணப்படுத்தும் வழிபாட்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இராகமா இலங்கை அன்னை பசிலிக்காவில் நடந்த வழிபாட்டில் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் இரு துணை ஆயர்களும் நூற்றுக்கணக்கான குருக்களும் அருள்சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த 67 ஆண்டுகளாக இந்த குணப்படுத்தும் வழிபாடு ஆண்டுதோறும் நடந்துவருகிறது.
உலகப்போரில் இலங்கை காப்பாற்றப்பட்டதற்கு நன்றியாக இலங்கை அன்னை பசிலிக்கா கட்டப்பட்டது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.