2014-09-15 16:15:14

ஆயர் பொன்னையா : ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக நாம் அனைவரும் செபிக்கவேண்டும்


ஆயர் பொன்னையா : ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக நாம் அனைவரும் செபிக்கவேண்டும்

செப்.15,2014. உலகெங்கும் ஒவ்வொரு நாளும் துன்புறுத்தப்பட்டுவரும் கிறிஸ்தவர்களுக்காக, குறிப்பாக ஈராக் நாட்டிலே ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாதிகளினால் துன்புறுத்தப்பட்டுவரும் மக்களுக்காகச் செபிக்க அழைப்புவிடுத்தார் மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா.
இயேசுவை அறைந்த திருச்சிலுவையின் ஒரு சிறிய பகுதி போற்றிப் பாதுகாக்கப்பட்டுவரும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் திருச்சிலுவையின் திருவிழாவினை முன்னிட்டு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய ஆயர் பொன்னையா, ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் கிறிஸ்தவர்கள் மதம் மாற வற்புறுத்தப்படுகின்றனர் மற்றும் அச்சுறுத்துகின்றனர் என்ற கவலையை வெளியிட்டார்.
ஈராக் மற்றும் சிரியாவில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கவேண்டும் என தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்து வருவதையும் நினைவுறுத்தினார் ஆயர் பொன்னையா.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.