2014-09-13 16:55:19

அரபு உலகைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம், முதுபெரும் தந்தை லகாம்


செப்.13,2014. மத்திய கிழக்கில் வாழும் அரபுக் கிறிஸ்தவர்கள், ஒருவர் ஒருவரை அன்புகூருவதற்கும், ஒருவர் ஒருவருக்கு உதவி செய்வதற்கும் அழைப்புப் பெற்றுள்ளனர், இதன்மூலம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாப்பார்கள் என்று மெல்கிதே வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கிரகரி லகாம் அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் இப்படி நடப்பதன் மூலமே மத்திய கிழக்குப் பகுதியில் காணப்படும் வேறுபாடுகள் மேற்கொள்ளப்படும் மற்றும் அரபு மக்களிடையே ஒற்றுமை நிலவும் என்று முதுபெரும் தந்தை 3ம் லகாம் அவர்கள் வாஷிங்டனில் இவ்வாரத்தில் நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்புக் கருத்தரங்கில் கூறினார்.
அரபு சமுதாயம் நல்லதோர் உலகை அமைப்பதற்கு நம் அனைவரின் ஒற்றுமையும், நாமும் தேவைப்படுகின்றோம் என்றும் முதுபெரும் தந்தை லகாம் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.