பங்களாதேசில் நிலச்சரிவைத் தடுக்க, மரம் நடும் பணியில் காரித்தாஸ் அமைப்பு
செப்.08,2014. பங்களாதேஷ் நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மண்சரிவைத் தடுக்கவும்,
மரம் நடும் பசுமைத் திட்டம் ஒன்றை செயல்படுத்திவருகிறது அந்நாட்டு கத்தோலிக்கக் காரித்தாஸ்
அமைப்பு. அரசு சாரா ஏனைய 6 நிறுவனங்களுடன் இணைந்து அண்மையில் பங்களாதேஷின் Bandarban
பகுதியில் 16 கிலோமீட்டருக்கு மரங்களை நட்டுள்ள காரித்தாஸ் அமைப்பு, 'அனைவரும் ஒன்றிணைந்து
வாழும் ஒரு மேம்பட்ட உலகை அமைத்தல்' என்ற நோக்கில் இதனை ஆற்றிவருவதாக அறிவித்தது. அணமையில்
சுயவிருப்பப் பணியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த மரம்நடு விழாவில், Bandarban பகுதியின்
தல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.