2014-09-06 16:00:10

திருத்தந்தைக்கு அர்ஜென்டீனா சிறாரிடமிருந்து ஐம்பதாயிரம் கடிதங்கள்


செப்.06,2014. "இயேசு நல்ல ஆயர். நாம் பாவிகளாக இருந்தாலும் அவர் நம்மைத் தேடுகிறார் மற்றும் நமக்கு அருகில் இருக்கிறார், உண்மையில் நாம் பாவிகள்" என்ற சொற்களை, தன் Twitter செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அர்ஜென்டீனா நாட்டுச் சிறாரிடமிருந்து ஐம்பதாயிரம் கடிதங்களை இம்மாதத்தில் பெறவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“தாங்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் எப்படி இருக்க விரும்புகிறோம்” என்பதை விளக்கும் அர்ஜென்டீனா நாட்டுச் சிறாரின் ஐம்பதாயிரம் கடிதங்களை இம்மாதம் 18ம் தேதி பெறவுள்ளார் திருத்தந்தை.
அர்ஜென்டீனாவின் கோர்தோபா மாநிலத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 25ம் தேதியன்று மிதி வண்டியில் பயணத்தைத் தொடங்கியுள்ள எட்டுப்பேர் இம்மாதம் 18ம் தேதி உரோம் வந்தடைந்து இக்கடிதங்களைத் திருத்தந்தையிடம் கொடுப்பார்கள். இந்த எட்டுப்பேரும் தாங்கள் கடந்துவந்த பயணத்தில் இக்கடிதங்களைச் சிறாரிடமிருந்து பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.