2014-09-05 16:10:17

சிறார்க்கெதிரான வன்முறை ஒழிக்கப்பட உலகம் துரிதமாய்ச் செயல்பட வேண்டும், யூனிசெப்


செப்.05,2014. சிறார்க்கெதிரான வன்முறை உலகம் தழுவிய ஒன்றாகவும், சமுதாயங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது என்று,ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
சிறார்க்கெதிரான வன்முறை குறித்து 190 நாடுகளில் ஆய்வு செய்து இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், உலகில் 2 வயதுக்கும் 14 வயதுக்கும் உட்பட்ட சிறாரில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பாகத்தினர், அதாவது ஏறக்குறைய நூறு கோடிச் சிறார் உடலளவில் துன்புறுத்தப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
உண்மையில், உலகில் இடம்பெறும் கொலைகளில் ஐந்தில் ஒரு பகுதியினர் இருபது வயதுக்குட்பட்ட சிறார் எனவும், 2012ம் ஆண்டில் ஏறக்குறைய 95 ஆயிரம் சிறார் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் யூனிசெப் நிறுவனத்தின் சிரார் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் Susan Bissell கூறினார்.
உலகில் சிறார்க்கெதிரான வன்முறை ஒவ்வொரு நாளும் நடக்கின்றது என்றும், இருபது வயதை அடையும் முன்னரே, பத்து சிறுமிகளுக்கு ஒருவர் வீதம், அதாவது ஏறக்குறைய 12 கோடிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.