2014-09-02 15:40:04

திருத்தந்தை: மரியன்னை இல்லையெனில் நாம் அநாதை


செப்.02,2014. 'அன்னை மரியை தன் தாயாக ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவர் ஓர் அநாதைக்கு ஒப்பாவார்' என தன் செவ்வாய்க்கிழமை டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் தன் எண்ணத்தை குறுஞ்செய்தியாக டுவிட்டர் பக்கம் மூலம் வெளிப்படுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்விலும் மரியன்னை பெறவேண்டிய இடத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.