திருத்தந்தை : படைப்பை மதிப்பதன் மூலம் மக்களின் வாழ்வைப் பாதுகாக்கமுடியும்
செப்.01,2014. இத்தாலிய ஆயர் பேரவை சிறப்பித்த 'படைப்பைப் பாதுகாக்கும் நாள்' குறித்து
தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாண்டு,
இந்நாளுக்கென இத்தாலிய ஆயர்கள் எடுத்துள்ள தலைப்பு மிக முக்கியமான ஒன்று என தெரிவித்த
திருத்தந்தை, 'படைப்பைப் பராமரிக்க கற்றுக்கொடுத்தல் என்பது, நம் நாடு மற்றும் நகர்களின்
நலனுக்காகவே' என்ற தலைப்பு குறித்து தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார். சுற்றுச்சூழலையும்
படைப்பையும் மதிப்பதன் மூலம் மக்களின் நலன் மற்றும் வாழ்வைப் பாதுகாக்க முடியும் என்ற
குடிமக்களின், அமைப்புகளின், நிறுவனங்களின் அர்ப்பணத்தை மேலும் பலப்படுத்த, இத்தினமும்
அதன் இவ்வாண்டு தலைப்பும் உதவும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தன் மூவேளை செப உரையின்
இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.