2014-08-28 16:32:06

ஜெர்மனியில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான நீர்ப் பாலம்


ஆக.28,2014. ஜெர்மனியில் ஆற்றின் மேலேயே கட்டப்பட்டுள்ள நீர்ப் பாலத்தின் மேலே படகு போக்குவரத்து நடைபெறுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
உலகில் அமைந்துள்ள மிக நீளமான நீர்ப் பாலம் எனப் புகழ்பெற்ற இது Magdeburg என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்தப் பாலத்தை கட்ட 1905ம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டு, பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 1930ம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள் 1942ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இரண்டாம் உலகப் போர் காரணமாகவும், இரு நாடுகளாகக் கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் பிரிந்ததாலும், கட்டுமானப் பணிகளைத் தொடர முடியவில்லை.
கடந்த 1990ம் ஆண்டில் கிழக்கு ஜேர்மனியும், மேற்கு ஜேர்மனியும் ஒன்றாக இணைந்ததால், 1997ம் ஆண்டில் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2003ம் ஆண்டில் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்காக பாலம் திறக்கப்பட்டது.
918 மீட்டர் நீளமும், 34 மீட்டர் அகலமும், 4.25 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நீர்ப் பாலம், தற்போது ஜேர்மனியின் தலைநகரான பெர்லினின் உள் நாட்டுத் துறைமுகத்தையும், ரைன் நதி துறைமுகத்தையும் இணைக்கிறது.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.