2014-08-20 16:54:55

நெருங்கிய உறவினர்களில் மூவர் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி, திருத்தந்தையை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது


ஆக.20,2014. ஆகஸ்ட் 19, இச்செவ்வாய் அதிகாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெருங்கிய உறவினர்களில் மூவர் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி, திருத்தந்தையை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்காக செபத்தில் தன்னுடன் இணையும்படி திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தம்பி, மறைந்த Alberto Bergoglio அவர்களின் மகன், Emmanuel Horacio Bergoglio அவர்கள் ஓட்டிவந்த கார், ஒரு லாரியுடன் மோதியதில், அக்காரில் பயணித்த எம்மானுவேல் அவர்களின் மனைவி, Valeria அவர்களும், அவர்களுடைய இரண்டுவயது குழந்தை Joseம், எட்டுமாதக் குழந்தை, Antonioவும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
38 வயதான எம்மானுவேல் அவர்கள், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
விடுமுறை நாட்களை முடித்துவிட்டு, குடும்பத்துடன் திரும்பிக் கொண்டிருந்த எம்மானுவேல் அவர்கள் ஓட்டிவந்த கார், ஆர்ஜென்டீனா நாட்டின் Cardoba எனுமிடத்தில் இந்த விபத்துக்குள்ளானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.