2014-07-31 16:45:02

Chanda சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்


ஜூலை,31,2014. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், மன்னிக்கவும் உதவியாக இருக்கும் குடும்பச் செபத்தை, ஒவ்வொரு குடும்பமும் மீண்டும் புதுப்பிக்கட்டும் என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டுள்ளார்.
மேலும், கேரளாவின் Chanda சீரோ மலபார் மறைமாவட்டத்தின் ஆயர் விஜய் ஆனந்த் நெடும்புரம் அவர்களின் பணிஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள் பணியாளர் எப்ரம் நாரிகுளம் அவர்களை, புதிய ஆயராக அம்மறைமாவட்டத்திற்கு நியமித்துள்ளார்.
1960ம் ஆண்டு, சஞ்ஜோபுரம் என்ற ஊரில் பிறந்த அருள் பணியாளர் நாரிகுளம் அவர்கள், 1986ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆன்மீக இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அருள் பணியாளர் நாரிகுளம் அவர்கள், சீரோ மலபார் அருள் பணியாளர்களைப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.