ஜூலை,29,2014. வீட்டுப் பணியாளர்களின் சேவைக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்
என்பதை மையமாக வைத்து இச்செவ்வாய்க்கிழமையன்று டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். "வீடுகளில் பணிபுரிவோர், மற்றும் நலமற்றோரை கவனிப்போர் ஆற்றும் உதவிகளுக்கு
நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போமாக. ஏனெனில் அவர்களுடைய பணி விலைமதிப்பிட முடியாதது"
என குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.