மூதாதையர் வழிபாடும், வயதானவர்களை மதிப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தின் சிறப்பான பண்புகள்,
யாங்கூன் பேராயர்
ஜூலை,26,2014. மூதாதையர் வழிபாடும், வயதானவர்களை மதிப்பதும் கிழக்கத்திய கலாச்சாரத்தில்
சிறப்பான பண்புகளாய் இருப்பதால், மியான்மார் சமுதாயத்தில் அனைத்துக் குழுவினரும் ஒரே
குடும்பமாய் ஒன்றிணைக்கப்பட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது என்று யாங்கூன் பேராயர்
சார்லஸ் போ கூறினார். இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட தூய மரியாளின் பெற்றோராகிய
புனிதர்கள் சுவக்கீம், அன்னா விழாவுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள
பேராயர் சார்லஸ் போ அவர்கள், நம் அன்னைமரியிடமிருந்து நாம் பெற்றுள்ள பரம்பரை புண்ணியத்தின்
எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார். மியான்மார் சமுதாயம், ஏழு பெரிய இனக் குழுக்களிடமிருந்து
பிறந்துள்ள ஏழு குழந்தைகள் போன்ற ஒரு வண்ணக் குடும்பம், இந்தப் பெரிய நாட்டின் பிள்ளைகளாகிய
நம்மை இறைவன் ஏராளமான கொடைகளால் ஆசீர்வதித்துள்ளார் என்றும் பேராயரின் செய்தி கூறுகிறது. மியான்மாரின்
வரலாற்றைப் பார்க்கும்போது, இந்நாட்டின் அழகு, வியத்தகு இயற்கை வளங்கள், திறமையுள்ள மக்கள்
என, நாடு பலவகைகளாலும் சிறந்துள்ளது என்றும், எனினும் நாடு தொடர் வெறுப்புணர்வுகளால்
குத்தப்பட்டு வருகின்றது என்றும் யாங்கூன் பேராயரின் செய்தி கூறுகிறது.