பிறப்பிலேயே காது கேளாத சிறுவனுக்கு மீண்டும் கேட்கும் திறன்
ஜூலை,26,2014. கானடாவில் பிறப்பிலேயே காது கேளாத சிறுவன் ஒருவனை அறுவை சிகிச்சை மூலம்
கேட்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கானடாவின் மொன்ட்ரியல் மாநிலத்தைச்
சேர்ந்த Auguste Majkowski என்ற 3 வயது சிறுவன் பிறப்பில் இருந்தே காது கேளமால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இச்சிறுவனுக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில், அவனது மூளைத்தண்டில்
கேட்கும் சாதனம் ஒன்றை பொருத்தியுள்ளனர். இது குறித்து மருத்துவர் Laurie Eisenberg
கூறுகையில், இவ்வாறு ஒரு சிறுவன் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது என்றும், தனது பணிக்காலத்தில்
இதுவரை நான் யாரையும் பார்த்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.